08 November 2006

பூணூலும் காந்தியாரும்...

பூணூல் பற்றி அடிக்கடி பல கேள்விகள் எழுகிறது. பூணூல் உயர்சாதி தன்மையை அடியாளாமாக்குகிறது என பகுத்தறிவுவாதிகள் கருத்து கொண்டுள்ளமை நாம் அறிந்ததே. பூணூலில் என்ன இருக்கிறது இப்படி பெரிதாக பேச என்ன இருக்கிறது?

பூணூல் என்பது என்ன?
யஜ்னோபவிதா, என்றழைக்கப்படுகிற கையால் பின்னப்பட்ட நூல் பெரும்பாலும் பிராமணர்களால் அணியப்படுகிறது. இடது தோளிலிருந்து தொங்கியவாறு மார்பு வழியாக புரண்டு வலது பக்கம் இடை வரை உருள்கிறது. இதை பூணூல் என்றும் அழைக்கப்படுகிறது. பூணூல் அணுயும் பழக்கம் வேதகாலத்தில் சடங்குகள் செய்யும் போது அணிய துவங்கியதாக கருதப்படுகிறது.

8 வயதானதும் பிராமண சிறுவனுக்கு (வது) முதலில் உபன்னயானா சடங்கு நடத்தி 3 நூல்களடங்கிய யஜ்னோபவிதா, (பூணூல்) அணிவிக்கப்படுகிறது. அத்துடன் புனிதமாக கருதப்படுகிற காயத்ரி மந்திரத்தையும் பயிற்றுவிக்கிறார்கள். திருமணமானதும் பொறுப்பை உணர்த்தும் அடையாளமாக 6 நூல்களாக அவை அதிகரிக்கிறது.
இன்றைய இந்து சமுதாயத்தில் பூணூல் பண்டைய கால மரபையும் சாதி அடையாளத்தையும் வெளிப்படுத்துகிறது. பெரும்பாலும் பெண்களுக்கு யஜ்னோபவிதா அணிவிப்பதில்லை.

பூணூல் பற்றி காந்தியார் சொன்ன கருத்துக்கள்...
"நான் பெரியவன் ஆகிவிட்ட பிறகு, இந்தியாவிலும் தென்னாப்பிரிக்காவிலும், பலர் நல்ல எண்ணத்தின் பேரிலேயே நான் பூணூல் போட்டுக் கொள்ளும்படி செய்ய முயன்றார்கள். ஆனால் அவர்கள் முயற்சி வெற்றியடையவில்லை. சூத்திரர்கள் பூணூல் போட்டுகொள்ளுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று விவாதித்தேன். பூணூல் கொள்ளுவது அனாவசியமான பழக்கம் என்பது என் கருத்து. ஆகையால் அதை அணிஅய் வேண்டும் என்பதற்குப் போதுமான நியாயம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. பூணூலைப் பொறுத்தவரையில் எனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. ஆனால் அதை அணியவேண்டும் என்பதற்குரிய நியாயம் தான் எனக்குத் தென்படவில்லை."

காந்தியாரை மட்டுமல்ல திருவள்ளுவர் பட சர்ச்சையில் பூணூல் வரைந்து திருவள்ளுவர் பிராமணர் என சாதி அடையாளத்தை புகுத்த நடந்த வித்தையும் ஒரு வரலாறு.

பூணூலை கழற்றி எறிகிற சிலர் கூட தங்கள் மனதிற்குள் இருக்கிற பூணூலை அணிந்து கொண்டு தான் காரியங்களில் ஈடுபடுகின்றனர். எப்படியிருப்பினும் பூணூல் இன்றைய காலத்தில் சாதியின் அடையாளமாக வர்ணாஸ்ரமத்தின் சின்னமாக விளங்குகிறது என்பதை மறுக்க இயலுமா?