30 August 2006

பெரியார் சிலைக்கு சந்தனம்: 2 சிவசேனா கட்சியினர் கைது

பெரியார் சிலைக்கு சந்தனம்: 2 சிவசேனா கட்சியினர் கைது
ஆகஸ்ட் 30, 2006

திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் பெரியார்சிலைக்கு சந்தனம் பூசிஅவமரியாதை செய்த சம்பவம் தொடர்பாக சிவசேனா கட்சியைச் சேர்ந்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள பெரியார் சிலைக்கு சந்தனம் பூசியும், மாலை அணிவித்தும், சூடம் ஏற்றி, ஊதுவத்தி கொளுத்தியும் அவமரியாதை செய்யப்பட்டது. இதனால் தி.க.வினர் கடும்ö காந்தளிப்படைந்தனர்.

சட்டசபையிலும்இப்பிரசிசனை எதிரொலித்தது. இந்தசெயலில் ஈடுபட்டவர்கள் பன்றிக் குணம் படைததவர்கள் என்று முதல்வர் கருணாநிதி காட்டமாக பதிலளித்தார். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இருவரும் சிவசேனை கட்சியைச் சேர்ந்தவர்கள். திண்டுக்கல்லில் மணிமாறன் என்பவரை முதலில் நேற்று இரவு போலீஸார்பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் மாவட்ட சிவசேனா செயலாளரான தர்மராஜாஎன்பவரை பல்லவ நாயக்கன்பட்டி என்றகிராமத்தில் வைத்து போலீஸார்கைதுö சய்தனர்.

தர்மராஜா மீது ஏற்கனவே தி.க. பிரமுகர் ராஜேந்திரன் என்பவரை அரிவாளால் வெட்டியது உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: http://thatstamil.oneindia.in/news/2006/08/30/periyar.html

No comments: