17 November 2006

பெரியார் எந்த கடவுளை எதிர்த்தார்?

நண்பர்களே!

பெரியார் பற்றி தெரியாமலும், பெரியார் ஆற்றிய சுயமரியாதை பணியின் மீதுள்ள வெறுப்பிலும் பார்ப்பனீயவாதிகள் பெரியார் மீது சேறு வீசுவது வழக்கமானதே. பெரியார் உயிருடன் இருக்கையில், வேத சாஸ்திரங்கள் சொல்லி இருப்பதன் படி மேடைகளில் செருப்பு, கற்கள், மலம் என வீசி குழப்பங்களை உருவாக்கி அவரை பேச விடாது தடுக்கும் முயற்சியை மேற்கொண்டவர்கள் இந்த பார்ப்பனவாதிகள். இவர்களது மூதாதையர் செய்த இந்த வேதக்கொடுமைகளை கண்டு கலங்காது சுயமரியாதையில் நிமிர்ந்து நின்று மனிதனை மனிதனாக நேசிக்க கற்றுத்தந்தவர் தந்தை பெரியார். இன்று இணையத்தளங்களில் பெரியாரை பற்றி தவறான தகவல்களை பரப்ப ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க பார்ப்பனீயம் தனது வழக்கமான நடைமுறைகளை கையாழுகிறது. இதுவும் அவர்கள் பெரியாருக்கு செய்யும் பெருந்தொண்டாக கருதலாம். இவர்கள் தவறான தகவல்கள் பரப்புகிற வேளை தானே, நம்மால் உண்மையை அறியவும், பரப்பவும் முடிகிறாது.

பெரியார் கடவுள் எதிர்ப்பாளர் என்ற ஒரு வளையத்தில் அடங்குபவரல்ல. பெரியாரைப் பற்றிய பெரும்பாலான பரப்புரைகள் கடவுளுக்கு எதிரி என்ற ரீதியில் தான் அமைகிறது. இது பெரியாரை முழுமையாக புரிந்து கொள்ளாமையின் வெளிப்பாடு அல்லது அவரது சுயமரியாதை போராட்டத்தை வளரவிடாது பார்ப்பனீய அடக்குமுறையை வளர்க்கும் முயற்சியாக தான் இருக்க இயலும். பெரியார் எந்த கடவுளுக்கு எதிரி? அவரே பேசுகிறார் கேளுங்கள்...இனி பெரியாரின் குரல்

°°°°°°°°°°°
சில தொழிலாளர் தலைவர்கள் என்பவர்கள் என்மீது குரோதம் கொண்டிருக்கிறார்கள். என்னைப்பற்றி விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள். ‘ராமசாமி நாயக்கர் மதத்தில், கடவுளில் பிரவேசிக்காவிட்டால் நான் அவருடன் நேசமாக இருப்பேன். ஆனால், அவர் நாத்திகம் மதத்துவேஷம் பேசுகிறார். ஆகையால் ஜாக்கிரதையாக இருங்கள்' என்று உங்கள் தலைவர்களில் சிலர் சொல்லி, உங்களை என்னிடம் அணுகவிடாமல் செய்கிறார்கள். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை.

எது மதம், எது கடவுள் என்பது இந்த அன்னக் காவடிகளுக்குத் தெரியுமா? நான் எந்த மதத்தை, எந்தக் கடவுளை ஒழிக்கவேண்டும் என்று சொல்லுகிறேன் என்பது, இந்தத் தற்குறிகளுக்குத் தெரியுமா என்று கேட்கிறேன். எந்த ஒரு மதம் ஒரு மனிதனை, ‘பிராமணனாக'வும் ஒரு மனிதனைச் சூத்திரனாகவும் அதாவது தொழிலாளியாகவும் பாட்டாளியாகவும், பறையனாகவும் உண்டு பண்ணிற்றோ, அந்த மதம் ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறேன். ஒழிய வேண்டுமா வேண்டாமா? (ஆம், ஒழிய வேண்டும் என்னும் பேரொலி).

எந்தக் கடவுள் ஒருவனுக்கு நிறையப் பொருள் கொடுத்தும், ஒருவனுக்குப் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் வாழ உரிமை கொடுத்தும் மற்றொருவனை உழைத்து உழைத்து ஊரானுக்குப் போட்டுவிட்டுச் சோற்றுக்குத் திண்டாடும்படியும், ரத்தத்தை வேர்வையாய்ச் சிந்தி உடலால் உழைத்தவண்ணம் இருந்து கீழ் மகனாய் வாழும்படியும் செய்கிறதோ, அந்தக் கடவுள் ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறேன். அந்தக் கடவுள் ஒழிய வேண்டுமா, வேண்டாமா? ஆகவே தோழர்களே! இது சொன்னால் நான் நாத்திகனும், மதத் துவேஷியுமா? ‘ஆம் ஒழிய வேண்டும்' என்று சொன்ன நீங்கள் மதத்துவேஷியா, நாத்திகர்களா?

°°°°°°°°°°°

(சென்னை ‘பி அண்ட் சி மில்' தொழிலாளர்கள் கூட்டத்தில் 30.6.1946 அன்று ஆற்றிய உரை)

நன்றி: கீற்று.காம்

5 comments:

குழலி / Kuzhali said...

//இதுவும் அவர்கள் பெரியாருக்கு செய்யும் பெருந்தொண்டாக கருதலாம். இவர்கள் தவறான தகவல்கள் பரப்புகிற வேளை தானே, நம்மால் உண்மையை அறியவும், பரப்பவும் முடிகிறாது.
//
திரு இது மிகவும் உண்மை, இவர்கள் இப்படி தூற்றவில்லையென்றால் உண்மையை எப்படி இந்த தலைமுறைக்கு கொண்டு செல்வது?

Sivabalan said...

திரு

நல்ல பதிவு.

தேவையான பதிவு.

நன்றி.

Anonymous said...

Mikavum Nallathu.Need of the hour.People should understand all Periyar wanted was every one to have self respect and Arivu{rational knowledge not just degrees!}.He patiently answered every one's questions.Only his questions stay unanswered even today.He always said not to accept because he said so,think for yourself and accept only what you think is right.Please visit periyar.org and read the publications.
Nandri.

Darren said...

தலைமுறைகள் தாண்டி வாழும் பெரியாரிசம்.

Anonymous said...

Those who claim equality in their religion do not provide that to the downtroden. Its mearely a written document for cheating gullible people.

So, in general today's christianity which treats non-white christians as slaves, and today's islam which treats non-arab muslims as second class or even lesser than animals are all should be in the list of religions that needs to be banned and thrown out.

Periyar, if he were alive today would have accepted it. However, the question remains, how many of today's periyarists are willing to accept this truth on face ?