12 August 2006

பெரியாரின் வார்த்தைகளில் அவரைப் பற்றி...

ஈ.வே.ராமசாமி என்கின்ற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்.

அந்த தொண்டு செய்ய எனக்கு "யோக்கியதை" இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்த பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற்போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.

இதை தவிர வேறு எந்த பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாக கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அத் தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகின்றேன்.

சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகின்றேன்.


ஈ.வே.இராமசாமி

1 comment:

Thamizhan said...

இந்தப் பதிவில் பெரியாரைப் பற்றிக் கேள்விகள் கேட்க விரும்புகிறவர்கட்குப் பதிலளிப்போம்.
மற்ற இணையங் களின் இனைப்புக்களையும் போட்டினீர்களானால்
பார்ப்பவர்களுக்கு எளிதாக இருக்கும்.
நன்றி.